Description
சார ஜோதிட (STELLAR ASTROLOGY) இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் !!
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் பற்றி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயது முதல் ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிட முறையை நன்கு கற்று, பின்பு உயர் கணித சார ஜோதிட முறையை (Advanced KP Stellar Astrology) பிரசன்ன ஜோதிடமணி திலக் K.பாஸ்கரன், மதுரை அவர்களிடம் கற்றவர்.
சுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, 25 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர். தனது 33 வயதில் இருந்து யான் பெற்ற கல்வி இவ்வையகமும் பெறுக ! என்ற வகையில் உயர் கணித சார ஜோதிடத்தை கற்பிக்கும் ஆசிரியராக இருந்து, குறுகிய காலத்தில் பல ஆயிரக்கணக்கான ஜோதிடர்களை உருவாக்கி உள்ளார், அவர்களில் பலர் ஜோதிடத்தை முழு நேர தொழிலாகவும், பகுதி நேர தொழிலாகவும், ஜோதிட ஆசிரியர்களாகவும், விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னிடம் பயின்ற ஜோதிடர்களை ஒன்றிணைக்க அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்(All India Association Of Stellar Astrologers) என்ற அமைப்பை கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நிறுவினார். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் மாதந்திர ஜோதிட கருத்தரங்கு கூட்டங்களும், வருடந்தோறும் ஜோதிட மாநாடும் இவரது தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தனது மாணவர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் உயர் கணித சார ஜோதிடத்தை நன்கு கற்பதற்காக இருபதுக்கும் மேற்பட்ட பயனுள்ள நூல்களை எளிய நடையில், விரிவாக, தெளிவாக எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய ஜோதிட நூல்கள் மூலம் இவருக்கு உருவான ஆயிரக்கணக்கான வாசகர்கள் மூலமும், இவர் உருவாக்கிய ஜோதிடர்கள் மூலமும், இளைஞரான இவருக்கு சார ஜோதிட உலகத்தினர் "ஜோதிட நல்லாசிரியர்" "சார ஜோதிட சக்கரவர்த்தி" போன்ற உயரிய அங்கீகாரத்தை தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைவான கட்டணத்தில் உயர் கணித சார ஜோதிட முறையில் (Stellar Astrology / KP System) ஜாதகம் கணித்து பலன் கூறுதல், திருமண பொருத்தம் பார்த்தல், அடிப்படை (பாரம்பரியம்) ஜோதிடம் மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தை நேரடி குருகுல பயிற்சி வகுப்புகள் மூலம் (Advanced K.P Stellar Astrology) பயிற்சி கொடுத்தல் போன்ற பணிகளையும் செய்கிறார்.
மேலும் ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, E-Mail மூலமாக தொடர்பு கொண்டு பலன்களை அறிந்து கொள்ளலாம்